அசாமில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.

Update: 2021-07-07 04:21 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் கோல்பரா பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.  காலை 8.45 மணியளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.  அண்மையில் தான் அரியானாவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது அசாமிலும் ஏற்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்