தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு இடத்திற்கு மட்டும் அறிவிப்பு வேளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

Update: 2021-08-17 07:09 GMT
சென்னை,

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு இடத்தில் செப்டம்பர் 13-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருக்கும் நிலையில்,  ஒரு இடத்துக்கான ராஜ்யசபா தேர்தல் செப்டம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவை தொடர்ந்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 
  • வேட்பு மனு துவக்கம்- ஆகஸ்ட் 24
  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் -ஆகஸ்ட் 31
  • வேட்பு மனு பரிசீலனை - செப்டம்பர் 1
  • திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3 
  • தேர்தல் நடைபெறும் நாள்; செப்டம்பர் 13 (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

மேலும் செய்திகள்