மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் புள்ளிகள் உயர்வு
மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 167 புள்ளிகள் உயர்வடைந்து உள்ளது.
மும்பை,
மும்பை பங்கு சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடையும்போது, சென்செக்ஸ் குறியீடு 167 புள்ளிகள் (0.29 சதவீதம்) உயர்வடைந்து 58,297 புள்ளிகளாக உள்ளது.
இவற்றில், தகவல் தொழில் நுட்பம் மற்றும் தானியங்கி துறை லாப நோக்குடன் காணப்பட்டது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 54 புள்ளிகள் (0.31 சதவீதம்) உயர்வடைந்து 17,378 புள்ளிகளாக உள்ளது.
நிப்டியில் ரியல் எஸ்டேட் துறை 3.1 சதவீதம், தகவல் தொழில் நுட்பம் 1.5 சதவீதம் மற்றும் தானியங்கி துறை 0.4 சதவீதம் உயர்வு அடைந்திருந்தன.