டெல்லியில் என்கவுண்ட்டர்: 2 போலீசார் காயம்; குற்றவாளி உயிரிழப்பு

டெல்லியில் நடந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி ஒருவர் கொல்லப்பட்டார்.

Update: 2021-10-29 04:27 GMT

புதுடெல்லி,


டெல்லியில் ரோகிணி பகுதியில் பேகம்பூர் என்ற இடத்தில் போலீசாருக்கும், குற்றவாளி ஒருவருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது.  இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  இந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி கொல்லப்பட்டு உள்ளார்.  இதனை டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்