டெல்லியில் என்கவுண்ட்டர்: 2 போலீசார் காயம்; குற்றவாளி உயிரிழப்பு
டெல்லியில் நடந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி ஒருவர் கொல்லப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியில் ரோகிணி பகுதியில் பேகம்பூர் என்ற இடத்தில் போலீசாருக்கும், குற்றவாளி ஒருவருக்கும் இடையே துப்பாக்கி சண்டை ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த என்கவுண்ட்டரில் குற்றவாளி கொல்லப்பட்டு உள்ளார். இதனை டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.