குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்; போலீசார் தகவல்

குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று போலீசார் அதிர்ச்சி தகவல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2021-11-23 15:59 GMT

வதோதரா,

குஜராத்தின் போலீஸ் துணை சூப்பிரெண்டு கே.கே. பட்டேல் கூறும்போது, 120 கிலோ ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று நேற்று 2 கிலோ ஹெராயின் கைப்பற்றப்பட்டு உள்ளது.  4 பேரை கைது செய்துள்ளோம்.  இதுவரை மொத்தம் குஜராத்தில் ரூ.730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்