அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அருணாசல பிரதேசத்தில் இன்று அதிகாலை மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-01-18 00:48 GMT

இடாநகர்,



அருணாசல பிரதேசத்தின் வடமேற்கே 148 கி.மீ. தொலைவில் பசார் என்ற பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டரில் 4.9 ஆக பதிவாகி உள்ளது என்று தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

மேலும் செய்திகள்