நாடு முழுவதும் மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - உள்துறை அமைச்சர் அமித்ஷா

வருகிற 2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் தானாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் என்று அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2022-05-10 09:27 GMT
கவுகாத்தி, 

அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா பங்கேற்றாா். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவா் நாடு முழுவதும் மின்னணு முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டம் இருப்பதாக கூறினாா்.  

 மேலும் வருகிற 2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு பிறப்பும் இறப்பும் தானாகவே மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்படும் வகையில் மக்கள் தொகை பதிவேடு நவீனமயமாக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பை அறிவியல் பூர்வமாக்க மேலும் நவீனமயப்படுத்தப்படும்” என்றார். 

மேலும் செய்திகள்