கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-01 23:13 GMT

லக்னோ,

தனது மகள் கடத்தி கட்டாய மதமாற்றம், திருமணம் செய்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பாதிப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகார் குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, உத்தரபிரதேச மாநிலம் குண்டா மாவட்டம் காலனிகஞ்ச் பகுதியை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கும் அதேபகுதியை சேர்ந்த ஜாவித் என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த மாதம் 14-ம் தேதி அந்த பெண்ணை ஜாவித் கடத்திச்சென்றுள்ளார். அந்த பெண்ணை மும்பைக்கு கடத்தி சென்ற ஜாவித் அங்கு ஒரு அறையில் அடைத்துவைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை மதமாற்றம் செய்து ஜாவித் திருமணம் செய்துள்ளார்.

பின்னர், அந்த பெண்ணை ஜாவித் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து கடந்த 23-ம் தேதி காலனிகஞ்ச் பகுதியில் உள்ள ரெயில் நிலையத்தில் தனது மகளை இறக்கிவிட்டு விட்டு ஜாவித் தப்பிச்சென்றுள்ளார். தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து யாரிடமாவது புகார் அளித்தால் கொலை செய்துவிட்டுவேன் என ஜாவித் மிரட்டியுள்ளார்' என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜாவித் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்