இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-11-08 04:45 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 625 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 62 ஆயிரத்து 141 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 17 ஆயிரத்து 611 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 14 ஆயிரத்து 021 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 509 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இந்தியாவில் நேற்று மட்டும் 1,43,638 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்