மைசூரு அருகே சாலை விபத்து: 10 பேர் பலி

கர்நாடக மாநிலம் நரசீப்பூர் பிரதான சாலையில் தனியார் பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-05-29 11:43 GMT

மைசூர்,

கர்நாடகா மாநிலம் கொள்ளேகால் - டி நரசிபுரா சாலையில் குருபுரு கிராமத்தின் பிஞ்சரா கம்பத்தில்இன்றி மதியம் நடந்த பயங்கர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

தனியார் பேருந்து ஒன்றும் இன்னோவா காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன இந்த் விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். காரில் சிக்கியவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, குழந்தை உட்பட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என் அஞ்சப்படுகிறது.

விபத்தில் இறந்தவர்களில் சிலர் பெல்லாரி சங்கனக்கல் பகுதியை சேர்ந்தவர்கள். இவர் பெல்லாரி ஊரகத் தொகுதியில் உள்ள சங்கனக்கல்லில் இருந்து மைசூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர். காரில் இருந்த 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த மூவரும் பெல்லாரியைச் சேர்ந்த ஜனார்தன் (45), புனித் (4), சசிகுமார் (24) என அடையாளம் காணப்பட்டு சாமராஜநகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவரின் நிலைமை மிகவலைக்கிடமாக உள்ளது. அனைவரும் மேல் சிகிச்சைக்காக மைசூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்