கேதர்நாத் யாத்திரை நாளை தொடக்கம் - ஏற்பாடுகள் தீவிரம்

‘சார் தாம்’ யாத்திரையை முன்னிட்டு கேதர்நாத் கோவில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

Update: 2024-05-09 13:53 GMT

டேராடூன்,

இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. இந்த யாத்திரைப் பயணம் நாளை தொடங்க உள்ளது.

ஆண்டுதோறும் 6 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். குளிர்காலங்களில் கோவில்கள் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடும். மேலும் பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் என்பதால் பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படும்.

இந்த நிலையில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கேதர்நாத் மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பகல் 12.20 மணிக்கு கங்கோத்ரி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. அதே சமயம், பத்ரிநாத் கோவிலின் நடை வரும் 12-ந்தேதி காலை 6 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கேதர்நாத் கோவிலில் மலர் அலங்காரங்கள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்