பீகாரில் ரெயில் விபத்து: 3 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு..!!

பீகாரில் நிகழ்ந்த ரெயில் விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டதால் பரபரப்பு நிலவுகிறது.;

Update:2023-10-11 23:49 IST

Image Courtacy: ANI

பாட்னா,

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் (12506) 3 பெட்டிகள் பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே இரவு சுமார் 9.35 மணியளவில் தடம் புரண்டன.

இந்த விபத்தில் பல பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மேலும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்த பயணிகளை மீட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவ குழுவினர் மற்றும் அதிகாரிகளுடன் விபத்து நிவாரண வாகனம் சம்பவ இடத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை என்றும் கிழக்கு மத்திய ரெயில்வே மண்டலம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து தகவல் அறிய ரெயில்வே தரப்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி

PNBE helpline:- 97714 49971

DNR helpline:- 89056 97493

COMM CNL:- 77590 70004

ARA helpline:- 83061 82542

ஆகிய எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்