170 மது பாட்டில்களை கடத்திய 2 பேர் கைது

170 மது பாட்டில்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-17 17:19 GMT

அரியலூர் மாவட்டம் கல்லகம் ரெயில்வே கேட் பகுதியில் கீழப்பழுவூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் 170 மது பாட்டில்களை கடத்தி வந்த பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடியை சேர்ந்த வேல்முருகன்(வயது 32), அய்யாக்கண்ணு(75) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்