திருப்பதி அருகே நின்றிருந்த வேன் மீது கார் மோதல்; 5 பேர் பலி
திருப்பதி அருகே நின்றிருந்த வேன் மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
திருப்பதி,
திருப்பதியில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி சென்ற கார் ஒன்று மாமண்டூர் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். காரில் பயணம் செய்தவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.