காவிரி விவகாரம் : சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக; கிடைத்த வாய்ப்பை தவற விட்டது திமுக - முதலமைச்சர்

காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக; கிடைத்த வாய்ப்பை தவற விட்டது திமுக - என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

Update: 2019-07-20 07:36 GMT
சென்னை

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்  என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது  என  முதலமைச்சர்  பழனிசாமி ஸ்டாலினுக்கு பதில் அளித்தார்.

காவிரிக்கு நடுவர் மன்றம் வேண்டும் என்று வலியுறுத்தியது திமுக தான் என  துரைமுருகன்  கூறினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் இருந்த போது காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட  திமுக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.

மேலும் செய்திகள்