ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் - அமைச்சர் கிண்டல்

ஸ்டாலின் ஆட்சிக்கு வருவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார் என அமைச்சர் உதயகுமார் கிண்டல் செய்து உள்ளார்.

Update: 2019-10-09 04:59 GMT
நாங்குநேரி,

நாங்குநேரியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆட்சி மாற்றம் எனும் பலாப்பழத்தை காட்டி தொண்டர்களை ஸ்டாலின் வழிநடத்துகிறார்; ஆனால், என்றைக்கும் அந்த பலாப்பழம் அவருக்கு கிடைக்காது!”.

இதுவரை ஆட்சிக்கு வந்து விடுவோம் என ஒரு லட்சத்து, 11 ஆயிரம் முறை சொல்லிவிட்டார்  ஸ்டாலின். இனிமேல் சொன்னாலும் ஆட்சிக்கு ஸ்டாலின் வர மாட்டார் என கூறினார்.

மேலும் செய்திகள்