இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது - திருமாவளவன் பேட்டி

இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

Update: 2019-11-17 16:06 GMT
சென்னை,

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடனான சந்திப்பிற்கு பின் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தேர்தல் முடிவு மிகவும் கவலையளிக்கிறது. சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியை  சந்தித்து கோரிக்கை விடுத்தேன். உள்ளாட்சி மன்றங்களில் துணை தலைவர் பதவிக்கு இட ஒதுக்கீடு தேவை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்