பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல்

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு கொலை மிரட்டல் ஓட்டல் தொழிலாளி கைது.

Update: 2022-03-29 20:01 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் ஆமீன்புரம் பகுதியை சேர்ந்தவர் யூசுப் என்ற பாபா யூசுப் (வயது 52). இவர் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலைக்கு முகநூலில் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யூசுபை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்