ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவனும் உயிரிழந்தான்

ஆவடியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

Update: 2023-09-29 08:38 GMT

ஆவடி ரெயில் நிலையம் அருகே கடந்த 24-ந்தேதி இரவு தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 40) மற்றும் ஆவடி கோவர்த்தனகிரி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வரும் ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தை சேர்ந்த அப்பண்ணா என்பவருடைய மனைவி மங்கா (36) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மங்காவின் மகன் நவீன் (12) படுகாயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தான். இந்தநிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை சிறுவன் நவீனும் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து ஆவடி ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்