12 ஆண்டுகளாக தலைமறைவு; கொலை குற்றவாளியை பிடிக்க நீதிபதி உத்தரவு

கொலை குற்றவாளியை பிடிக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து செந்துறை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

Update: 2023-10-17 17:28 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது 56). இவர் கடந்த 2006-ம் ஆண்டு அதே தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்தார். அப்போது அவரை செந்துறை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் ஜாமீனில் வெளியே வந்த விஸ்வநாதன் வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாமல் தலைமறைவானார். அதனால் செந்துறை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தார். இந்த நிலையில் வருகிற 19-ந் தேதிக்குள் விஸ்வநாதன் நீதிமன்றத்தில் சரணடைய வில்லை என்றால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த செந்துறை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்