சிவகாசியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா

சிவகாசியில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Update: 2023-10-17 20:14 GMT

அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா . விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பாக சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கட்சி கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இதில் சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முத்துபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரமணா, சிவகாசி மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சாம்ராஜா, சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், லயன் லட்சுமிநாராயணன், ஆரோக்கியம், இளநீர் செல்வம், மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல விருதுநகரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி எம்.ஜி.ஆர். சிலைக்கும், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், மேற்கு மாவட்ட அமைத்தலைவர் விஜயகுமரன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் கலாநிதி, விருதுநகர் நகர செயலாளர் முகமது நைனார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், மச்சராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் சரவணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்