ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஆனந்த நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.;

Update:2023-06-24 00:15 IST

ஆனி திருமஞ்சன விழா

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் உள்ள சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன திருவிழா நேற்று தொடங்கியது. விழாவையொட்டி மாணிக்கவாசகர் குருபூஜையும், பெண்கள் பங்கேற்ற திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது.

இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு திருநெறிய தெய்வத்தமிழ் வழிபாட்டு சபையினரால் திருமுறை மற்றும் திருப்புகழ் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு நால்வர் திருவீதி உலாவும், அபிஷேக பொருட்கள் வரிசை அழைப்பும் நடைபெறுகிறது.

மகா அபிஷேகம்

விழாவின் முக்கிய நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் புஷ்பாஞ்சலியும், 108 சங்காபிஷேகம், கலசபிஷேகம் நடக்கிறது. அப்போது சாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடக்கிறது. பின்னர் தங்கக்கவச அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும், மகா தீபாராதனையும் நடக்கிறது.

இதைத்தொடர்ந்து இரவு திரு ஆபரண அலங்கார காட்சியுடன் அம்மையப்பன் திரு நடன திருவீதி உலா மற்றும் கோபுர தரிசனம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆனி திருமஞ்சன விழா குழுவினர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்