இருதரப்பினர் மோதல்; 6 பேர் படுகாயம்

பேரையூர் அருகே பட்டாசு போடுவதில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-05-04 19:41 GMT

பேரையூர், 

பேரையூர் அருகே பட்டாசு போடுவதில் தகராறு ஏற்பட்டு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

இருதரப்பினர் மோதல்

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது வண்டாரி. இந்த கிராமத்தில் உள்ள ஒரு தரப்பினர் கோவிலுக்கு பொங்கல் வைக்க சென்ற போது பட்டாசு வெடித்துள்ளனர். பட்டாசு சிதறி மற்றொரு தரப்பினர் பகுதியில் உள்ள வீட்டில் வெடித்தது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஒருவரை ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டனர். மேலும் ஒருவரை ஒருவர் அடித்து தாக்கி கொண்டனர்.

6 பேர் காயம்

இதில் ஒரு தரப்பை சேர்ந்த கோபால், சின்னசாமி, பாண்டி கண்ணன், அன்னக்கொடி ஆகியோருக்கும், மற்றொரு தரப்பை சேர்ந்த சுந்தரமகாலிங்கம், பழனி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இருதரப்பை சேர்ந்த காயம் அடைந்தவர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இருதரப்பினரும் சாப்டூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்