அரியலூர்: ரூ.32.94 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்...!

அரியலூரில் நடந்த நிகழ்ச்சியில் 25.20 கோடி ரூபாய் மதிப்பிட்டிலான திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-29 06:51 GMT

அரியலூர்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்றார்.

அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் 32.94 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், 25.20 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை துவக்கிவைத்தார். இதனை தொடர்ந்து 36 ஆயிரத்து 691 பயனாளிகளுக்க்கு 78 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்