வாலிபரை தாக்கிய நண்பர்கள்

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-10-15 20:31 GMT

திருச்சி விமானநிலையம் பகுதியை சேர்ந்தவர் ஞாசசேகரன் (வயது 34). இவர் செம்பட்டு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய நண்பர்கள் 4 பேர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்