குட்கா விற்றவர் கைது

திருவள்ளூரில் குட்கா விற்பனையில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-11 07:35 GMT

திருவள்ளூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் சிறுவானூர், கொசவன்பாளையம், கைவண்டூர் சுற்று வட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தபோது விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் திருவள்ளூர் அடுத்த பிரயாகுப்பம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 51) என்பவரை கைது விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்