மணப்பாறை, செப்.11-
மணப்பாறை பூமாலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ் (வயது 40). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4-ந் தேதி எலி பேஸ்ட் (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அருள்தாஸ் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.