மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி

மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-08-25 12:59 GMT

மதுரை,

மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் வாட்ஸ்அப் மூலம் பண மோசடி சம்பவம் அரங்கேறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் பணிபுரிந்து வருகிறார். இவர் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கிய மர்மநபர் ஒருவர் உதவி ஆணையர்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டுள்ளார்.

இதனை நம்பி சிலர் பணத்தை அனுப்பி ஏமாந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஆணையரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார். விசாரணையில் பெண் ஒருவர் அந்த எண்ணில் பேசியதும் மோசடியாக பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் பெயரில் இதுபோன்ற மோசடி நடைபெற்றதும் தெரிய வந்தது.

ஏற்கெனவே, காவல்துறை அதிகாரிகள் பெயரில் மோசடிகள் அரங்கேறி வந்த நிலையில் இப்போது மதுரை மாநகராட்சி ஆணையர் பெயரில் மோசடி நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்