மின்னல் தாக்கியதில் தாய்- மகன் காயம்

திருக்கோவிலூர் அருகே மின்னல் தாக்கியதில் தாய் மற்றும் மகன் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-08 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அருகே நெடுமுடையான் கிராமத்தை சேர்ந்தவர் சிவசக்தி (வயது 35). இவரது மகன் சந்தோஷ். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் தனது வீட்டு வராண்டாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் சிவசக்தி, சந்தோஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்