கயத்தாறு அருகே மினிவேன் மோதி விவசாயி பலி

கயத்தாறு அருகே மினிவேன் மோதி விவசாயி பலியானார்.;

Update:2023-07-07 00:15 IST

கயத்தாறு:

கயத்தாறு அருகே ராஜாபுதுக்குடியை சேர்ந்தவர் அண்ணாவி (வயது 65). விவசாயி. நேற்று காலையில் பஸ்ஸ்டாப் அருகிலுள்ள டீக்கடைக்கு அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கொரியர் மின்வேன் அவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். சாலையில் விழுந்த அவர் மீது கண்இமைக்கும் நேரத்தில் மீண்டும் அந்த வேன் ஏறியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டனி திலீப் சம்பவ இடத்திற்கு சென்று, அண்ணாவியின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறந்து போன அண்ணாவிக்கு ஆறுமுகம் என்ற மனைவியும், ஒரு மகன், 2மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்