வாகனம் மோதி மூதாட்டி சாவு

சங்கரன்கோவில் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-09-20 00:30 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பாரதியார்நகரைச் சேர்ந்தவர் நாகசாமி மனைவி சித்திரைவடிவு (வயது 73). இவர் ராஜபாளையம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

Tags:    

மேலும் செய்திகள்