அரவைக்காக 1,000 டன் நெல்

நீடாமங்கலத்தில் இருந்து விருதுநகருக்கு அரவைக்காக 1,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-12-14 18:48 GMT

நீடாமங்கலம்;

திருவாரூர் மாவட்டம் தெற்குநத்தம், ஆதனூர், இடையர்நத்தம், அசேஷம், கிடாரம்கொண்டான் ஆகிய ஊர்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட ஆயிரம் டன் எடைகொண்ட நெல் 78 லாரிகளில் நீடாமங்கலம் ெரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை சரக்கு ெரயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து நெல் அரவைக்காக விருதுநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்