கிருஷ்ணகிரியில்உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

Update: 2023-05-31 18:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கி, உறுதிமொழியை படிக்க அலுவலர்கள் திரும்ப படித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு, நில அளவை பிரிவு உதவி இயக்குனர் சேகரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ராஜேந்திரன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்