திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி மாணவியை கடத்திய வாலிபர், போக்சோவில் கைது

Update: 2022-09-12 21:02 GMT

பவானி

பவானியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ்-2 மாணவி ஒருவர் மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அந்த மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி கடத்தி சென்றதாக பவானியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டம் சாணந்தல் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் அருண்குமார் (வயது 22),' என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்