இறந்து கிடந்த டெய்லர் குறித்து போலீசார் விசாரணை

இறந்து கிடந்த டெய்லர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-10-13 23:31 IST

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். டெய்லரான இவர் சம்பவத்தன்று மாலை அப்பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதியழகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்