பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஆலங்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-23 19:29 GMT

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களிலும், நிர்வாகிகள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர். இதனை கண்டித்து ஆலங்குடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் பெரிய பள்ளிவாசல் முன்பாக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கைது ெசய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்