பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை

பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை

Update: 2023-02-01 12:40 GMT

பல்லடம்

பழனி தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று பழனி முருகப்பெருமானை தரிசிப்பார்கள். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் விபத்தில் சிக்காமல் இருக்க அவர்களுக்கு, இரவில் ஒளிரும் பட்டைகள் (பிரதிபலிப்பான்கள்) வழங்கும் நிகழ்ச்சி பல்லடம் பனப்பாளையம் பகுதியில் நடைபெற்றது. திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் வினீத் கலந்து கொண்டு பாத யாத்திரை பக்தர்களுக்கு இரவில் ஒளிரும் பட்டை, பிஸ்கட், குடிநீர், தேநீர் உள்ளிட்டவைகளை வழங்கினார். இதில் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், ஆய்வாளர்கள் நிர்மலாதேவி, (திருப்பூர் தெற்கு), ஈஸ்வரன் (காங்கயம்), பல்லடம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்