தமிழக சட்டசபையின் முதல் கூட்டம்; 2 நிமிடங்களில் நிறைவடைந்த கவர்னர் உரை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது

Update: 2024-02-12 04:33 GMT

சென்னை,

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆண்டுதோறும் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், ஜனவரி மாதம் 2-வது வாரத்தில் வழக்கமாக சட்டசபை கூடும். ஆனால், இந்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்பெயின் பயணம் போன்ற காரணங்களால், சட்டசபை கூடுவது தள்ளிப்போனது. இந்த நிலையில், ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்க கவர்னர் ஆர்.என்.ரவி , முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தனர் .

தலைமைச் செயலகம் வந்த கவர்னருக்கு  பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. .சட்டசபை வளாகத்தில் கவர்னருக்கு சிவப்பு கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது .

இந்த நிலையில் காலை 10 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை தொடர்ந்து உரையாற்றிய கவர்னர் ஆர்.என். ரவி 2 நிமிடங்களில் தனது உரையை நிறைவு செய்தார்.

தேசிய கீதம் முதலிலும், இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும்.   உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்க விரும்பவில்லை என்று கூறி உரையை 2 நிமிடங்களில் கவர்னர் நிறைவு செய்தார். சட்டப்பேரவையில் கவர்னர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்