ஓசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஓசூரில் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்தனர்.

Update: 2022-07-16 17:07 GMT

ஓசூர்

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குனர் பரமசிவன் தலைமையிலான மருத்துவ குழுவினர், ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு செயல்பட்டு வரும் ஸ்கேன் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர், மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் 15 நாட்களுக்குள் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களை வெளியேற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும், 4 வார காலங்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் எனவும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட இணை இயக்குனர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்