மொபைல் கடை ஊழியருக்கு கத்திக்குத்து

காவேரிப்பட்டணம் அருகே மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்தய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-23 18:45 GMT

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த கூரம்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 19). மொபைல் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (25). உறவினர்களான இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்துள்ளது. நேற்று முன்தினம் பூபாலன் மற்றும் அவரது உறவினர் ரவி (45) ஆகியோர், குமார் வேலை செய்யும் கடைக்கு சென்று தகராறு செய்தனர். பின்னர் அவரை கத்தியால் குத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த குமார் காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்