ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன்

Update:2023-01-05 00:15 IST

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள ஆனங்கூர் பகவதி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழாவில் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனிதநீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து பூச்சாட்டுதல், பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வடிசோறு நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து நடந்த தீமிதி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் ஆனங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி, மாவிளக்கு பூஜை, வான வேடிக்கை நடந்தது.

திருவிழாவில் இன்று (வியாழக்கிழமை) காலை கிடா வெட்டுதலும், மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஆனங்கூர் பகவதியம்மன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்