மாணவன் உயிரை பறித்த ஆராய்ச்சி... பாதுகாப்பு கருதி வீட்டை இடித்த அதிகாரிகள்

சென்னை கொளத்தூரில், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவன், வேதிப்பொருள் வெடித்து உயிரிழந்தார்.

Update: 2024-03-24 17:36 GMT

சென்னை,

சென்னை கொளத்தூரில், அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்ட மாணவன், வேதிப்பொருள் வெடித்து உயிரிழந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.

வீட்டில் இருந்து 2 முறை லேசான வெடிச்சத்தம் கேட்ட நிலையில், போலீசார் அந்த வீட்டை ஆட்களைக் கொண்டு சுத்தம் செய்தனர். அப்போது, மீண்டும் பலத்த சத்தத்துடன் வேதிப்பொருட்கள் வெடித்தது. பொதுமக்கள் அச்சம் தெரிவித்ததால், பாதுகாப்பு கருதி மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டை, பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தள்ளினர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்