ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூரில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாம்

Update: 2022-07-19 12:50 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) சுபாஷினி வரவேற்றார்.

மாவட்ட வளமைய அலுவலர் ஏசுதாஸ் மேற்பார்வையில், மாவட்ட பயிற்றுனர் ரவி, தொழில் நுட்ப அலுவலர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்தல், திட்டங்கள் ஒருங்கிணைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள்,

நிதி ஒதுக்கீடுகள், கிராம ஊராட்சியின் சொத்துக்கள் குறித்த தகவல்கள் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வது, கிராம ஊராட்சியில் அனைத்து வரவினங்கள் மற்றும் செலவினங்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது குறித்து பயிற்சியளித்தனர்.

முடிவில் உதவியாளர் (ஊராட்சிகள்) காண்டீபன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்