பழனி நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

பழனி நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update:2023-10-18 03:00 IST

பழனி நகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட புதுதாராபுரம் சாலை பகுதியில், கடந்த 2 மாதங்களாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், நகராட்சி அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கிடையே அங்கு வந்த நகராட்சி அதிகாரிகள், குழாய் உடைப்பை சீரமைக்கும் பணி முடிவடைந்து விரைவில் 5-வது வார்டு பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்