மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-06 19:21 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 34 வயது தொழிலாளிக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் அரசு பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் அந்த தொழிலாளி தனது மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வேறு யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் பீதியடைந்த சிறுமி நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இலுப்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது பட்டுக்கோட்டை அருகே நடந்த கொலை சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்