மியான்மரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு
மியான்மரில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது.
நைபிடா,
மியான்மரில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 10.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் நிலநடுக்கத்தை அறிவித்தது. மேலும் பொதுமக்களையும், அதிகாரிகளையும் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.