பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் பல மணிநேரம் மின்வெட்டு; மக்கள் பரிதவிப்பு

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சி ஆகிய முக்கிய நகரங்களில் பல மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு மக்களை பரிதவிப்பில் ஆழ்த்தியது.

Update: 2023-01-23 06:40 GMT



கராச்சி,


பாகிஸ்தான் நாட்டில் இன்று காலை பல்வேறு நகரங்களில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி அந்நாட்டின் மின்துறைக்கான செய்தி தொடர்பாளர் இம்ரான் ராணா டுவிட்டரில் இன்று வெளியிட்ட செய்தியில், வெவ்வேறு நகரங்களின் முக்கிய பகுதிகளில் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது என்ற தகவல் எங்களுக்கு வந்துள்ளது. அதுபற்றி நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, கராச்சி மற்றும் லாகூர் நகரங்களில் பல்வேறு பகுதிகளில் மின்வினியோக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டில் இருந்து வெளிவரும் ஜியோ நியூஸ் தெரிவித்து உள்ளது.

பாகிஸ்தானில் இன்று காலை 7.30 மணியில் இருந்து நாடு முழுவதும் மின்வினியோக துண்டிப்பு ஏற்பட்டு உள்ளது என அந்நாட்டு பத்திரிகையாளர் ஆசாத் அலி தூர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

பலூசிஸ்தானில் குவெட்டா உள்பட 22 மாவட்டங்களில் மின்வினியோகம் தடைப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பாதிப்புகள் நீடித்து வரும் சூழலில், கடந்த ஆண்டு அக்டோபரில், கராச்சி, லாகூர் உள்பட மாகாண தலைநகரங்களில் 12 மணிநேரத்திற்கும் கூடுதலாக மின்வெட்டு ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்