வயோதிக தோற்றத்தில் வைகுண்டவாசன்

காஞ்சீபுரம் அருகில் மாகறல் என்ற இடம் உள்ளது. இங்கு பெருமாள், வைகுண்டவாசராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.

Update: 2017-03-21 10:06 GMT
காஞ்சீபுரம் அருகில் மாகறல் என்ற இடம் உள்ளது. இங்கு பெருமாள், வைகுண்டவாசராக அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள் சற்றே முதிர்ந்த முகத்துடன், தாடி வைத்த வயோதிக தோற்றத்தில் காட்சியளிக்கிறார். அவரது மேல் வலது கரத்தில் சக்ராயுதமும், இடது கரத்தில் சங்கும் ஏந்தியிருக்கிறார். கீழ் வலது திருக்கரத்தில் அபய முத்திரையுடனும், கீழ் இடது கரத்தில் சின் முத்திரை காட்டும் விதமாகவும் காட்சியளிக்கிறார்.

மேலும் செய்திகள்