சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு;

Update:2023-01-04 00:15 IST

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிங்காரவேலர்

நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் நேற்று மார்கழி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி சிங்காரவேலவருக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிங்காரவேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேதாரண்யேஸ்வரர் கோவில்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக்கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் பிரகாரத்தில் அலங்கரிக்கப்பட்ட கேடயத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடு நடந்தது. இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர்கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் உள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் உள்ள முருகனுக்கும், நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்