புதிய பயிற்சியாளருடன் இணைந்து பணியாற்ற மிதாலி ஆர்வம்

புதிய பயிற்சியாளர் டபிள்யூ.ஏ.ராமனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்’ என்றார்.

Update: 2018-12-22 21:30 GMT

கொல்கத்தா, 

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் கொல்கத்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘சமீபத்தில் நடந்த நிகழ்வுகளால் (பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவாருடன் மோதல் போக்கு) நானும், எனது குடும்பத்தினரும் மிகுந்த வேதனைக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளானோம். அந்த வி‌ஷயங்களை மறந்து விட்டு நியூசிலாந்து தொடர் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. புதிய பயிற்சியாளர் டபிள்யூ.ஏ.ராமனுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் உள்ளேன்’ என்றார்.

மேலும் செய்திகள்